தனியார் துறையினால் தயாரிக்கப்பட்ட கையெறி குண்டுகள்
September 4 , 2021 1432 days 548 0
இந்தியாவிலேயே தனியார் துறையினால் தயாரிக்கப்பட்ட ஒரு லட்சம் அளவிலான நவீன கையெறி குண்டுகள் அடங்கிய முதல் தொகுப்பானது ‘எக்னாமிக் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் லிமிடெட்’ என்ற ஒரு நிறுவனத்தினால் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டது.
இந்த நிறுவனமானது நாக்பூரில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனமாகும்.
இந்தியாவிலுள்ள தனியார் தொழிற்சாலைகளில் வெடிமருந்துகள் தயாரிக்கப் படுவது இதுவே முதல் முறையாகும்.