TNPSC Thervupettagam

தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதா

October 20 , 2025 16 hrs 0 min 9 0
  • தமிழ்நாடு சட்டமன்றமானது 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக் கழகங்கள் (திருத்தம்) மசோதாவினை நிறைவேற்றியுள்ளது.
  • தற்போதுள்ள தனியார் அல்லது அரசு உதவி பெறும் கல்லூரிகளை 'ஏற்கனவே உள்ள கல்லூரிகளை (பிரவுன்ஃபீல்ட்) பல்கலைக்கழகங்கள்' என்ற புதிய நிறுவனமாக மாற்ற இது அனுமதிக்கும்.
  • அத்தகைய வசதியை நிறுவுவதற்கு அருகிலுள்ள நிலத்திற்கான குறைந்தபட்சத் தேவையை மாற்றுவதன் மூலம் இது மேற்கொள்ளப்படுகிறது.
  • 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 4 ஆம் பிரிவு ஆனது, மாநிலத்தில் தனியார் பல்கலைக் கழகங்களை நிறுவ குறைந்தபட்சம் 100 ஏக்கர் அளவிலான தொடர்ச்சியான நிலம் தேவை என்று குறிப்பிடுகிறது.
  • 2025 ஆம் ஆண்டு திருத்தம் ஆனது, பிரவுன் ஃபீல்ட் பல்கலைக்கழகங்களுக்கான குறைந்த பட்ச நில அளவை நகராட்சிப் பகுதிகளில் 25 ஏக்கராகவும், நகராட்சி மன்றம் அல்லது பேரூராட்சிப் பகுதிகளில் 35 ஏக்கராகவும், பிற பகுதிகளில் 50 ஏக்கராகவும் குறைத்துள்ளது.
  • சிறுபான்மை அல்லாத அனைத்து தனியார் பல்கலைக்கழகங்களிலும் மருத்துவம், பல் மருத்துவம், அதனுடன் தொடர்புடைய சுகாதாரம் மற்றும் இந்திய மருத்துவப் படிப்புகளில் 65 சதவீத இடங்களை அரசு இடங்களாக ஒதுக்கும் புதிய பிரிவும் சேர்க்கப் பட்டது.
  • சிறுபான்மை தனியார் பல்கலைக்கழகங்களுக்குப் பாதி இடங்கள் அரசு இடங்களாக ஒதுக்கப்படும்.
  • உதவி பெறும் கல்லூரிகள் தனியார் பல்கலைக் கழகங்களாக மாற்றப்பட்டால், அவை உதவி பெறும் அந்தஸ்தை இழந்து, அரசு மானியம் பெறுவது நிறுத்தப் படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்