தமிழ்நாடு அரசானது தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்த) மசோதா, 2025ஐ திரும்பப் பெற்றது.
தற்போதுள்ள தனியார் அல்லது அரசு உதவி பெறும் கல்லூரிகளை 'ஏற்கனவே உள்ள கல்லூரிகளை (பிரவுன்ஃபீல்ட்) பல்கலைக்கழகங்கள்'என்ற புதிய அமைப்பாக மாற்றுவதற்கு வழி வகுப்பதை இந்த மசோதா முன்மொழிந்தது
மாநகராட்சிப் பகுதிகளில் குறைந்தபட்ச நிலத் தேவையை 100 ஏக்கரிலிருந்து 25 ஏக்கராகவும், நகராட்சி மன்றம் அல்லது பேரூராட்சிப் பகுதிகளில் 35 ஏக்கராகவும், பிற பகுதிகளில் 50 ஏக்கராகவும் குறைத்தது.
உயர்கல்வி அமைச்சர் முன்னதாக அரசாங்கம் மசோதாவை மறுபரிசீலனை செய்து திரும்பப் பெறும் என்று கூறினார்.
தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்த) மசோதா, 2023 என்பதையும் அரசு திரும்பப் பெற்றது.
தமிழ்நாடு ஒதுக்கீட்டு (வாக்கெடுப்பு) மசோதா மற்றும் தமிழ்நாடு நிதிப் பொறுப்பு (திருத்த) மசோதாவை சட்டமன்றம் இதே அமர்வில் நிறைவேற்றியது.