TNPSC Thervupettagam

தபால் வாக்கு முறை

June 30 , 2020 1863 days 815 0
  • சமீபத்தில் மத்திய சட்டத்துறை அமைச்சகமானது மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் தபால் வாக்கைக் கோரும் மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பைக் குறைத்துள்ளது.
  • தற்பொழுது, 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் அல்லது கோவிட் – 19 நோய்த் தொற்று இருக்கும் எனச் சந்தேகிக்கப்படும் நபர்கள் தபால் வாக்கைக் கோர முடியும்.
  • இதற்கு முன்பு 2019 ஆம் ஆண்டில், மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களின் போது மாற்றுத் திறனாளிகள் மற்றும் 80 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்கு செலுத்தும் வகையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மத்திய சட்டத்துறை அமைச்சகம் திருத்தியிருந்தது.
  • இந்தத் திருத்தப்பட்ட விதிகளின் மூலம் பயனடையும் முதலாவது வாக்காளர்கள் பீகார் மாநில வாக்காளர்கள் ஆவார்.
  • இந்தியாவில் கொரானா வைரஸ் நோய் பாதிப்பிற்குப் பிறகு சட்டசபைத் தேர்தலைக் காண இருக்கும் முதலாவது மாநிலம் பீகார் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்