தமிழ்நாடு மாநில திட்டக் குழு, இணைய தளம் சார்ந்த Gig தொழிலாளர்களின் நிலை குறித்த ஆய்வை வெளியிட்டு, அவர்களின் நலன் மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளது.
Gig தொழிலாளர்கள் ஒன்றிணைந்து தங்களின் கோரிக்கைகளை முன்வைக்க தொழிற் சங்கங்களை உருவாக்க சட்டப்பூர்வ பாதுகாப்பு வழங்க இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.
சுகாதாரக் காப்பீடு, மகப்பேறு ஆதரவு, ஓய்வூதியங்கள், மாற்றுத்திறன் மற்றும் விபத்து இறப்புச் சலுகைகள் போன்ற சலுகைகளை உள்ளடக்கிய சமூகப் பாதுகாப்பு நிதிகளை உருவாக்க இது பரிந்துரைக்கிறது.
e-Shram அமைப்பில் Gig தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்கள் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் என்று இக்குழு முன்மொழிகிறது.
50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்கள், அரசால் நியமிக்கப் பட்ட குறை தீர்ப்பாளருடன் கூடிய உள் விவாதத் தீர்வு குழுக்களை அமைக்க வேண்டும்.