தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் – புதிய உறுப்பினர்கள்
July 16 , 2021 1735 days 1258 0
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு நான்கு புதிய உறுப்பினர்களை தமிழக அரசு நியமித்துள்ளது.
ஆட்சிப்பணி அதிகாரி S. முனியநாதன், பேராசிரியர் K. ஜோதி சிவஞானம், K. அருள்மதி மற்றும் A. ராஜ் மரியசூசை ஆகியோர் தமிழக அரசால் நியமிக்கப் பட்ட புதிய உறுப்பினர்கள் ஆவர்.
இவர்களின் பதவிக் காலமானது 6 ஆண்டுகள் வரை அல்லது அவர்கள் 62 வயதினை எட்டும் வரையிலாகும்.