TNPSC Thervupettagam

தமிழ்நாடு இடைக்கால வேளாண் பட்ஜெட் 2026–27 சிறப்பம்சங்கள்

February 20 , 2026 3 days 94 0
  • தமிழகத்தின் 2026–27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.
  • விவசாயிகள் நலன் மற்றும் விவசாய மேம்பாட்டை மையமாகக் கொண்டு, 2021–22 முதல் தமிழ்நாடு தனி விவசாய பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறது.

நிதி ஒதுக்கீடு

  • வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறைக்கான மொத்த ஒதுக்கீடு ₹47,248.24 கோடி ஆகும்.
  • வேளாண் பட்ஜெட் ஒதுக்கீடு 2021–22ல் 34,220 கோடியிலிருந்து 2026–27ல் 47,248 கோடியாக அதிகரித்துள்ளது.
  • விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறைகளுக்கான மொத்த பட்ஜெட் 45,661.44 கோடி (மூலதனம்: 8,352.19 கோடி; வருவாய்: 37,309.25 கோடி) ஆகும்.

வளர்ச்சி மற்றும் செயல்திறன்

  • 2012-13 முதல் 2020-21 வரை 1.36%  ஆக இருந்த விவசாயத்தின் சராசரி மொத்த மாநில மதிப்பு கூட்டல் 2021-22 முதல் 2024-25 வரை 3.03% ஆக உயர்ந்துள்ளது.
  • நிலையான (2011-12) விலையில் GSVA 2024-25 ஆம் ஆண்டில் 53,75,639 லட்சத்திலிருந்து சுமார் 9.97% அதிகரித்து 59,11,708 லட்சமாக இருந்தது.
  • மொத்த பயிர் பரப்பளவு 146.77 லட்சம் ஏக்கரிலிருந்து (2019–20) 151 லட்சம் ஏக்கராக (2023–24) அதிகரித்தது.
  • இரட்டைப் பயிர் சாகுபடி பரப்பளவு 29.74 லட்சம் ஏக்கரிலிருந்து (2019–20) 33.60 லட்சம் ஏக்கராக (2023–24) அதிகரித்தது.
  • 2021–24 ஆம் ஆண்டில் உணவு தானிய உற்பத்தி 346.38 லட்சம் மெட்ரிக் டன்களை எட்டியது.
  • இந்தியாவில் ராகி உற்பத்தித் திறனில் தமிழ்நாடு முதலிடத்திலும் சோளம், எண்ணெய் வித்துக்கள் மற்றும் கரும்பு உற்பத்தித் திறனில் 2வது இடத்திலும், நிலக்கடலை மற்றும் சிறு தானிய உற்பத்தித் திறனில் 3வது இடத்திலும் உள்ளது.
  • தமிழ்நாடு தேசிய அளவில் மரவள்ளிக்கிழங்கு மற்றும் மல்லிகை சாகுபடி பரப்பளவில் முதலிடத்திலும், நெல்லிக்காய், முட்டைக்கோஸ் மற்றும் முள்ளங்கி உற்பத்தியில் முதலிடத்திலும், மரவள்ளிக்கிழங்கு, மல்லிகை, பலாப்பழம் மற்றும் கொய்யா உற்பத்தியில் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
  • 2024-25 ஆம் ஆண்டில், இரட்டைப் பயிர் சாகுபடி பரப்பளவு 13.99 லட்சம் ஹெக்டேராக அதிகரித்தது என்பதோடு இது 2019-20 உடன் ஒப்பிடும் போது சுமார் 2 லட்சம் ஹெக்டேர் அதிகமாகும்.

விவசாயிகளுக்கான ஆதரவு நடவடிக்கைகள்

  • 2021–22 முதல், பாசனத்திற்காக விவசாயிகளுக்கு சுமார் 1.81 லட்சம் இலவச மின்சார இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
  • சுமார் 55,000 விவசாயிகள் மானிய விலையில் விவசாய இயந்திரங்களைப் பெற்றனர் என்பதோடு மேலும் 1,109 தனிப்பயன் வாடகை மையங்கள் நிறுவப்பட்டன.

நீர்வளம் மற்றும் வேளாண் காடுகள் வளர்ப்பு

  • கடந்த ஐந்து ஆண்டுகளில், 68,930 பாரம்பரிய நீர்நிலைகள் புதுப்பிக்கப்பட்டன; 1 லட்சம் பாசன கால்வாய்கள் தூர்வாரப்பட்டன; 29,800 தடுப்பணைகள் கட்டப்பட்டன; மேலும் 31,325 நிலத்தடி நீர் மறுசீரமைப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டன.
  • மொத்தம் 3.24 கோடி மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்பதோடு மேலும் 2.24 லட்சம் ஏக்கர் வேளாண் காடுகளின் கீழ் கொண்டுவரப்பட்டன.
  • புதிய திட்டங்கள் மற்றும் பணிகள்
  • விவசாய உள்ளீடுகள், நிபுணர் வழிகாட்டுதல் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை வழங்குவதற்காக 1,000 விவசாயிகள் சேவை மையங்களை அரசாங்கம் அறிவித்து உள்ளது.
  • மலை விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டம் 63,000 மலை விவசாயிகளுக்கு ஆதரவினை அளிக்கும்.
  • 17,116 கிராமங்களில் ஒரு கிராம மக்கள் தொடர்பு பிரச்சாரம் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கும்.
  • விவசாயிகள் குழுக்கள் மற்றும் பயிர் உற்பத்தி தொகுப்புகள் மூலம் தினை சாகுபடியை சிறுதானிய திட்டம் ஊக்குவிக்கும்.
  • இயற்கை வேளாண்மை முயற்சிகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயம், இயற்கை சான்றிதழ் மற்றும் சந்தைப்படுத்தல் ஆதரவை ஊக்குவிக்கும்.
  • குறைந்த நீர் தேவைப்படும் தினை, பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் போன்ற மாற்றுப் பயிர்களை பயிரிட விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
  • தரமான விதை உற்பத்தி மற்றும் விநியோகத்திற்காக 250 கோடி ஒதுக்கப்பட்டது.

சிறப்பு முன்னெடுப்புகள்

  • ஊட்டச்சத்து பாதுகாப்புக்காக ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் மற்றும் சிறு தானியங்களை ஊக்குவிக்கும்.
  • ஒருங்கிணைந்த தென்னை மேம்பாட்டுத் திட்டம் தென்னை சாகுபடி, பூச்சி கட்டுப்பாடு மற்றும் மதிப்பு கூட்டலை ஆதரிக்கும்.
  • சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர்ப்பாசன முறைகளுக்கு நுண் நீர்ப்பாசனத் திட்டத்திற்கு 1,168 கோடி ஒதுக்கப்பட்டது.
  • மேட்டூர் அணையை சரியான நேரத்தில் திறந்ததன் மூலம் தமிழ்நாட்டில் கூடுதலாக 3.48 லட்சம் ஹெக்டேர் பாசனம் செய்ய உதவியது.
  • விவசாய விளைபொருட்களுக்கான 100 மதிப்பு கூட்டல் அலகுகளை நிறுவ 50 கோடி ஒதுக்கப்பட்டது.
  • இயற்கைப் பேரிடர்களுக்கு எதிராக 35 லட்சம் ஏக்கர் நிலங்களைக் காப்பீடு செய்ய பயிர் காப்பீட்டுத் திட்டம் 841 கோடியைப் பெற்றது.
  • தமிழ்நாட்டில் மரம் மற்றும் வனப்பகுதியை 33% ஆக அதிகரிப்பதே அரசின் உறுதிப்பாடாகும்.
  • காடுகளுக்கு வெளியே பசுமைப் பரப்பை விரிவுபடுத்துவதற்காக பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் வேளாண் காடுகள் பரவலாக ஊக்குவிக்கப்படுகின்றன.
  • கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 3.24 கோடி மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டன என்பதோடு மேலும் 2.24 லட்சம் ஏக்கர் வேளாண் காடுகளின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
  • ஈட்டி மரங்களை வளர்ப்பதை ஊக்குவிப்பதற்காக வேண்டி, தமிழ்நாடு ஈட்டி மரங்கள் (பாதுகாப்பு) சட்டம், 1994, பிப்ரவரி 13, 2025 க்கு பிறகு நீட்டிக்கப்படவில்லை.

பிற ஒதுக்கீடுகள்

  • ஆறு மாவட்டங்களில் நீர்நிலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 68 கோடி ஒதுக்கப் பட்டது.
  • காலநிலைக்கு ஏற்ற விவசாய முயற்சிகளில் காலநிலைக்கு உகந்த மீத்திறன்  கிராமங்கள் மற்றும் மாதிரி செயல்விளக்கப் பண்ணைகள் அடங்கும்.
  • விவசாய இயந்திரங்கள் மற்றும் ட்ரோன்களை இயக்குவதில் கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சித் திட்டங்கள் உதவும்.
  • கால்நடைப் பராமரிப்பு, பால்வள மேம்பாடு, மீன்வளம், கிராமப்புற மேம்பாடு மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் (SHGs) ஆகியவற்றிற்கும் ஆதரவு வழங்கப்படுகிறது.
  • விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்காக 8,186 கோடி ஒதுக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்