2025–26 ஆம் நிதியாண்டிற்கான ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத்தின் முதல் தவணையாக தமிழகத்திற்கு 127.586 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கி உள்ளது.
இந்தத் தொகையானது, பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களுக்குப் பதினைந்தாவது நிதி ஆணைய மானியத்தினால் பரிந்துரைக்கப்பட்ட நிதியின் ஒரு பகுதியாகும்.
மானியங்கள் தமிழ்நாட்டில் தகுதியான 2,901 கிராமப் பஞ்சாயத்துகள், தகுதியான 74 தொகுதி பஞ்சாயத்துகள் மற்றும் தகுதியான ஒன்பது மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்பட்டது.
பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மற்றும் ஜல் சக்தி அமைச்சகம் ஆனது நிதி அமைச்சகத்திடம் மானியங்கள் குறித்த பரிந்துரைகளை வழங்குகின்றன.
இந்த மானியங்கள் நிதி அமைச்சகத்தால் ஒரு நிதியாண்டில் இரண்டு தவணைகளாக வெளியிடப்படுகின்றன.
ஒருங்கிணைக்கப்பட்ட மானியங்கள் ஆனது அரசியலமைப்பின் பதினொன்றாவது அட்டவணையில் பட்டியலிடப் பட்டுள்ள 29 பிரிவுகளின் கீழ் இடம் சார்ந்தத் தேவைகளுக்காக கட்டமைக்கப்படுகின்றன.
இந்த மானியங்களைச் சம்பளம் அல்லது பிற நிறுவன தொடர்பான செலவுகளுக்குப் பயன்படுத்த முடியாது.