TNPSC Thervupettagam

தமிழ்நாடு குடியரசு தின விருதுகள் 2026

January 31 , 2026 17 days 141 0
  • தமிழ்நாடு அரசின் 2026 ஆம் ஆண்டுக்கான வீரதீரச் செயலுக்கான அண்ணா விருது, பீட்டர் ஜான்சனுக்கு மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது.
  • கடந்த ஆண்டு தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய இரண்டு இளைஞர்களைக் காப்பாற்றும் முயற்சியில் அவர் உயிரிழந்தார்.
  • தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையைச் சேர்ந்த மூன்று வீரர்களான தீயணைப்பு ஓட்டுநர் வி. சங்கர், தீயணைப்பு வீரர் எஸ். ரமேஷ்குமார் மற்றும் தீயணைப்பு வீரர் பி. சுரேஷ் ஆகியோருக்கும் அண்ணா விருது வழங்கப்பட்டது.
  • இவர்கள் தர்மகிரியில் திடீர் வெள்ளத்தில் சிக்கிய வாகனத்தில் இருந்த மூன்று பேரையும் மீட்டனர்.
  • திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த எம். கலிமுல்லாவுக்கு கோட்டை அமீர் விருது வழங்கப் பட்டது.
  • விவசாயி ஜி. வீரமணிக்கு நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தித் திறன் விருது வழங்கப்பட்டது.
  • காவல்துறை ஆய்வாளர் பி. நடராஜன், உதவி ஆய்வாளர்கள் எம். சத்யானந்தன், எஸ். மணிகண்டன், கே. நடராஜன் மற்றும் காவலர் வி.பி. கண்ணன் ஆகியோருக்கு காந்தி அடிகள் காவல் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
  • மாநிலத்தின் சிறந்த காவல் நிலையங்களுக்கான முதலமைச்சர் கோப்பை பிரிவில், மதுரை நகரம், திருப்பூர் நகரம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்