எதிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான இளம் விளையாட்டுத் திறமையாளர்களைக் கண்டறிந்து பயிற்சி அளிப்பதற்காக தமிழ்நாடு அரசு 'திறமை ஆராய்ச்சிப் பிரிவை' அமைக்கும்.
இப்பிரிவு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) கீழ் ₹5 கோடி செலவில் நிறுவப்படும்.
இது 8 முதல் 18 வயது வரையிலான திறமையான சிறுவர், சிறுமிகளைக் கண்டறிந்து பயிற்சி அளிக்கும்.
₹15 கோடி செலவில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் நிறுவப்படும்.
சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் சிறப்பு மையம் மற்றும் SDAT ஒலிம்பிக் ஹவுஸ் அமைக்கப்படும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒலிம்பிக் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் தங்கம் வெல்பவர்களுக்கான ரொக்கப் பரிசு ₹3 கோடியில் இருந்து ₹5 கோடியாக உயர்த்தப் படும்.