மதுரையில் நடைபெற்ற TN ரைசிங் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு அரசானது 2025 ஆம் ஆண்டு பொம்மை உற்பத்திக் கொள்கையை அறிவித்தது.
உலகளாவிய பொம்மைச் சந்தை ஆனது 2024 ஆம் ஆண்டில் 180 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டது என்பதோடுஉலகளவில் இந்தியா ஒரு சதவீதத்திற்கும் குறைவான பங்கையே கொண்டுள்ளது.
இந்தக் கொள்கையானது, இந்தியாவில் 10 பெரிய பொம்மை நிறுவனங்களை அறிமுகம் செய்து ஒரு பொம்மை உற்பத்திப் பூங்காவை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
குறைந்தபட்சம் 50 வேலைவாய்ப்புகளுடன் 50 கோடி ரூபாய்க்கு மேலான முதலீடுகள் ஆனது மூலதன மானியம் மற்றும் வரி நிவாரணம் போன்ற சிறப்புச் சலுகைகளைப் பெறும்.
பொம்மை உற்பத்தி செய்யும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்களுக்கு (MSME) 1.5 கோடி ரூபாய் வரை மானியங்கள், சம்பள ஆதரவு மற்றும் வட்டி திருப்பிச் செலுத்துதல் வசதிகள் கிடைக்கப் பெறும்.
இந்தக் கொள்கையானது STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) நுட்பம் சார்ந்தப் பொம்மைகள், மின்னணுப் பொம்மைகள், புதிர்கள் மற்றும் சூப்பர் ஹீரோ உருவங்கள் போன்ற புதிய யுக பொம்மைகளை ஆதரிக்கிறது.