16வது நிதிக் குழுவின் பரிந்துரைகளின்படி, பகிரப்படக் கூடிய மத்திய வரிகளின் நிகர வருவாயில் 4.097 சதவீதத்தைத் தமிழ்நாடு பெறும்.
இது ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும்.
15வது நிதிக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட பகிரப்படக் கூடிய மத்திய வரிகளின் நிகர வருவாயில் 4.079 சதவீதத்துடன் ஒப்பிடும்போது இது சற்றே அதிகமாகும்.
இதனால், இது 0.44% அதிகரிப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது.
2026-27 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீட்டின்படி, பகிரப்படக் கூடிய மத்திய வரிகளின் நிகர வருவாயாக தமிழ்நாடு ₹62,530.65 கோடி பெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இது 2025-26 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட மதிப்பீடான ₹56,819.23 கோடியை விட அதிகமாகும்.
தமிழ்நாட்டைத் தொடர்ந்து தெலுங்கானா 3.43% வளர்ச்சியுடன் இரண்டாவது இடத்திலும், ஆந்திரப் பிரதேசம் 4.2% வளர்ச்சியுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
கர்நாடகா மற்றும் கேரளா மட்டுமே 13.27% மற்றும் 23.74% என்ற அளவில் இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தைக் கண்டுள்ளன.
அகில இந்திய அளவில், கேரளாவின் வளர்ச்சி விகிதம் ஹரியானாவின் 24.52%க்கு அடுத்தபடியாக மட்டுமே உள்ளது அதே நேரத்தில் மூன்றாவது இடம் கர்நாடகாவிற்கு செல்கிறது.
பரப்பளவு, மக்கள்தொகை செயல்திறன் மற்றும் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி) ஆகியவற்றின் அளவுகோல்களுக்கு ஒதுக்கப்பட்ட மதிப்பீடுகள் தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற மாநிலங்களைப் பாதிப்பதைக் குறைத்துள்ளன.
மக்கள்தொகை அளவுகோல் மட்டுமே அதன் மதிப்பீட்டில் 15% இலிருந்து 17.5% ஆக அதிகரிப்பைக் கண்டுள்ளது.
இருப்பினும், தமிழ்நாடு மற்றும் கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு இது பயனளிக்காது.
தெற்கிற்கான செங்குத்து அதிகாரப் பகிர்வில் அதிகரிப்பு, மேற்கு வங்கத்தைத் தவிர உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் பீகார் போன்ற ஆறு வட மாநிலங்களின் பங்கைக் குறைப்பதன் மூலம் அடையப் பட்டதாகத் தெரிகிறது.
51.20% ஆக இருந்த அந்த ஏழு மாநிலங்களின் ஒருங்கிணைந்தப் பங்கு 49.93% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
16வது நிதிக்குழு மானியங்கள் என்ற விவகாரத்தை விரிவாகக் கையாண்டுள்ளது என்றதோடு இந்த விஷயத்தில் தெற்கு ஒரு முன்னோடியாக இருந்து வருகிறது.
2023 24 ஆம் ஆண்டில் ₹78,453 கோடியுடன், தமிழ்நாடு அதிகபட்ச முழுமையான மானிய அளவைப் பெற்றது.
அதைத் தொடர்ந்து கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா முறையே ₹70,149 கோடி, ₹63,951 கோடி மற்றும் ₹62,847 கோடியுடன் உள்ளன.
மாநிலத்தின் அளவைக் கருத்தில் கொண்டு முழுமையான மானிய அளவுகள் "ஓரளவு தவறாக வழி நடத்தும்" என்று நிதிக்குழு சுட்டிக் காட்டுகிறது.
2024-26 காலக் கட்டத்தில் மானிய அளவுகள், அந்தந்த மாநிலத்தின் GSDP விகிதத்தில் 5% ஐத் தாண்டிய மாநிலங்களில் ஒன்றாக தெலுங்கானாவையும், ஆந்திரப் பிரதேசம் 3% முதல் 5% வரை மானிய அளவைக் கொண்டிருந்த மாநிலமாகவும் ஆணையம் பெயரிடுகிறது.
தென் மாநிலங்கள் பல விஷயங்களில் இதே போன்ற நிலைப்பாட்டை எடுத்திருந்தாலும், வருவாய் இடைவெளியைக் குறைப்பதற்கான நோக்கதத்தினைக் கொண்டுள்ள வருவாய்ப் பற்றாக்குறை மானியங்கள் தொடர்பாக அவை தங்களுக்குள் கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்தன.
கர்நாடகா இதில் சந்தேகம் தெரிவித்தாலும், ஆந்திரா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகியவை இந்த மானியங்களைத் தொடர விரும்பின.
இருப்பினும், 16வது நிதிக் குழுவின் பரிந்துரை இந்த மானியங்களுக்கு எதிரானது.
பகிரக் கூடிய நிதியிலிருந்து மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதிப் பகிர்வின் செங்குத்துப் பங்கில் 41 சதவீதத்தில் மத்திய அரசு தற்போதைய நிலையையே நீட்டித்துள்ளது.