2030 ஆம் ஆண்டிற்குள் ஐக்கிய நாடுகளின் நிலையான மேம்பாட்டு இலக்குகளில் (SDGs) முன்னேற்றத்தைக் கண்காணிக்க தமிழ்நாடு மாநிலக் குறிகாட்டி கட்டமைப்பு (SIF) 2.0 என்ற கட்டமைப்பினை வெளியிட்டுள்ளது.
இந்தக் கட்டமைப்பு 17 SDG இலக்குகளுக்கான குறிகாட்டிகளின் எண்ணிக்கையயை 314 என்பதிலிருந்து 244 ஆகக் குறைக்கிறது என்பதோடு மேலும் இது 28 மாநிலத் துறைகளால் கண்காணிக்கப்படுகிறது.
நிதி ஆயோக் அமைப்பின் படி, பீகாரில் 33.76% மற்றும் உத்தரப் பிரதேசத்தில் 22.93% என்பதுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் பல பரிமாண வறுமை விகிதம் 2.2% ஆக உள்ளது.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 1,000 பிறப்புகளுக்கு 13 மற்றும் மருத்துவமனை சார் பிரசவங்களில் 99.98% ஆக உள்ளது.
தமிழ்நாடு 2023–24 ஆம் ஆண்டிற்கான SDG இந்திய குறியீட்டில் 78 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
SIF 2.0 ஆனது ஐ.நா. உலகளாவிய குறிகாட்டி கட்டமைப்பு மற்றும் இந்தியாவின் தேசிய குறிகாட்டி கட்டமைப்புடன் (2025) இணைக்கப்பட்டுள்ளது.