தமிழ்நாடு முதலமைச்சர் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதியன்று சென்னையில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையத்தினை (TANSHA) திறந்து வைத்தார்.
இந்த ஆணையத்தின் அதிகாரப் பூர்வச் சின்னத்தையும் முதலமைச்சர் வெளியிட்டார்.
மாநில அரசானது 2024 ஆம் ஆண்டில் TANSHA ஆணையத்தினை நிறுவியது.
TANSHA, தமிழ்நாட்டில் உள்ள நான்கு வழித்தடங்கள் கொண்ட சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகள் உள்ளிட்ட முக்கியச் சாலை உள்கட்டமைப்புத் திட்டங்களைப் பொது - தனியார் கூட்டாண்மை மூலம் செயல்படுத்தும்.