TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் அருகி வரும் உயிரின நிதி குறித்த புதிய தகவல் 2025

May 24 , 2025 21 days 127 0
  • 2024 ஆம் ஆண்டில் 50 கோடி ரூபாய் ஆரம்பக் கட்ட நிதியுடன் தமிழ்நாடு அருகி வரும் உயிரின வளங்காப்பு நிதியானது அறிவிக்கப்பட்டது.
  • இது ஆரம்பத்தில் மாநில வன மேம்பாட்டுத் நிறுவனத்தினால் (SFDA) நிர்வகிக்கப்பட திட்டமிடப்பட்டது.
  • தமிழ்நாடு வனத்துறையின் இந்தத் திட்டம் தடைபட்ட பிறகு, இந்த நிதியை வேறு நிறுவனம் மூலம் திருப்பி விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், இந்த நிதிக்கான மேலாண்மை நிறுவனமாக SFDA நியமிக்கப் பட்டது.
  • இது ஆரம்பத்தில் முதுமலை புலிகள் வளங்காப்பக அறக்கட்டளையின் மூலமாக மேற் பார்வையிடப் பட இருந்தது.
  • மேற்கொண்டு ஏற்பாடுகள் செய்யப்படும் வரை 50 கோடி ரூபாய் நிதியை தமிழ்நாடு மின் நிதிக் கழகம் அல்லது தமிழ்நாடு போக்குவரத்து மேம்பாட்டு நிதிக் கழகம் தன் மேற்பார்வையின் கீழ் வைத்திருந்தது.
  • இந்த நிதியை நிர்வகிக்கும் பொறுப்பை வண்டலூரில் உள்ள மேம்பட்ட வனவிலங்கு வளங்காப்பு நிறுவனத்திற்கு (AIWC) மாற்றுவதற்கு வனத்துறை தற்போது முடிவு செய்து உள்ளது.
  • சமீபத்தில் ஒரு சங்கமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள இது வனவிலங்கு வளங்காப்பில் ஆராய்ச்சி மற்றும் முன்னெடுப்புகளுக்குப் பெயர் பெற்ற ஒரு நிறுவனமாகும்.
  • இந்த மாநிலத்தில் அருகி வரும் உயிரினங்கள் குறித்த ஒரு ஆராய்ச்சிக்கான மானிய திட்டங்களை AIWC ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • சலீம் அலியின் பழம் உண்ணும் வௌவால், மலபார் புனுகுப் பூனை, வெண் முதுகுக் கழுகு, நீலகிரி மருதத் தவளை, வெண்புள்ளிப் புதர்த் தவளை மற்றும் ஆனைமலை பறக்கும் தவளை ஆகியவை இதில்  அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்