தமிழ்நாட்டின் அருகி வரும் உயிரின நிதி குறித்த புதிய தகவல் 2025
May 24 , 2025 21 days 127 0
2024 ஆம் ஆண்டில் 50 கோடி ரூபாய் ஆரம்பக் கட்ட நிதியுடன் தமிழ்நாடு அருகி வரும் உயிரின வளங்காப்பு நிதியானது அறிவிக்கப்பட்டது.
இது ஆரம்பத்தில் மாநில வன மேம்பாட்டுத் நிறுவனத்தினால் (SFDA) நிர்வகிக்கப்பட திட்டமிடப்பட்டது.
தமிழ்நாடு வனத்துறையின் இந்தத் திட்டம் தடைபட்ட பிறகு, இந்த நிதியை வேறு நிறுவனம் மூலம் திருப்பி விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், இந்த நிதிக்கான மேலாண்மை நிறுவனமாக SFDA நியமிக்கப் பட்டது.
இது ஆரம்பத்தில் முதுமலை புலிகள் வளங்காப்பக அறக்கட்டளையின் மூலமாக மேற் பார்வையிடப் பட இருந்தது.
மேற்கொண்டு ஏற்பாடுகள் செய்யப்படும் வரை 50 கோடி ரூபாய் நிதியை தமிழ்நாடு மின் நிதிக் கழகம் அல்லது தமிழ்நாடு போக்குவரத்து மேம்பாட்டு நிதிக் கழகம் தன் மேற்பார்வையின் கீழ் வைத்திருந்தது.
இந்த நிதியை நிர்வகிக்கும் பொறுப்பை வண்டலூரில் உள்ள மேம்பட்ட வனவிலங்கு வளங்காப்பு நிறுவனத்திற்கு (AIWC) மாற்றுவதற்கு வனத்துறை தற்போது முடிவு செய்து உள்ளது.
சமீபத்தில் ஒரு சங்கமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள இது வனவிலங்கு வளங்காப்பில் ஆராய்ச்சி மற்றும் முன்னெடுப்புகளுக்குப் பெயர் பெற்ற ஒரு நிறுவனமாகும்.
இந்த மாநிலத்தில் அருகி வரும் உயிரினங்கள் குறித்த ஒரு ஆராய்ச்சிக்கான மானிய திட்டங்களை AIWC ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சலீம் அலியின் பழம் உண்ணும் வௌவால், மலபார் புனுகுப் பூனை, வெண் முதுகுக் கழுகு, நீலகிரி மருதத் தவளை, வெண்புள்ளிப் புதர்த் தவளை மற்றும் ஆனைமலை பறக்கும் தவளை ஆகியவை இதில் அடங்கும்.