TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் பெண் அமைச்சர்கள்

May 14 , 2026 16 hrs 0 min 4 0
  • 1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் கீழ் 1937 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு, சி. ராஜகோபாலாச்சாரி தலைமையில் அமைக்கப்பட்ட சென்னை மாகாண அமைச்சரவையில் பெண்கள் யாரும் இடம்பெறவில்லை.
  • இந்த அமைச்சரவை 1939 ஆம் ஆண்டு அக்டோபர் 30 அன்று ராஜினாமா செய்தது, அதைத் தொடர்ந்து 1946 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஆளுநர் ஆட்சி நீடித்தது.
  • இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, 1946 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 அன்று டி. பிரகாசம் தலைமையில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றது.
  • சுதந்திரப் போராட்ட வீரர் ருக்மிணி லட்சுமிபதி, சென்னை மாகாண அமைச்சரவையில் இடம்பெற்ற முதல் பெண் அமைச்சரானார். அவர் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறைகளைக் கவனித்துக்கொண்டார்.
  • இந்திய குடியரசான பிறகு, 1952 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகு சி. ராஜகோபாலாச்சாரி அமைத்த அமைச்சரவையில் பெண்கள் யாரும் இடம் பெறவில்லை.
  • 1953 ஆம் ஆண்டு அக்டோபர் 9 அன்று நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது, ஜோதி வெங்கடாசலம் அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவர் 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை அமைச்சராகப் பணியாற்றினார்.
  • பின்னர் காமராஜர் தலைமையில் அமைக்கப்பட்ட அமைச்சரவையில் முதலில் பெண்கள் இல்லை, ஆனால் 1957 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு, 1957ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று அமைக்கப்பட்ட அமைச்சரவையில் லூர்தம்மாள் சைமன் அமைச்சர் ஆனார்.
  • 1967 ஆம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலில் ஆட்சி அமைத்த போது, சி. என். அண்ணாதுரை அமைச்சரவையில் சத்தியவாணி முத்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரானார் என்பதோடு மு. கருணாநிதியின் அமைச்சரவையிலும் அவர் தொடர்ந்தார்.
  • எம். ஜி. ராமச்சந்திரனின் மறைவுக்குப் பிறகு, ஜானகி ராமச்சந்திரன் குறுகிய காலம் முதல்வராக இருந்தார் என்பதோடு அந்த அமைச்சரவையில் அவர் மட்டுமே ஒரே பெண்ணாக இருந்தார்.
  • 1991 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு, ஜெ. ஜெயலலிதா அமைச்சரவையில் ஆர். இந்திர குமாரி அமைச்சரானார் என்பதோடு அன்று முதல் தமிழ்நாட்டின் அமைச்சரவைகளில் பெண்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்