இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையத்தின் (FSSAI) பயன்படுத்தப் பட்ட சமையல் எண்ணெய்யின் (RUCO) மறுபயன்பாட்டு முன்னெடுப்பு ஆனது பயன்படுத்தப்பட்ட எண்ணெயினை உயிரி எரிபொருளாக மாற்றுவதை ஊக்குவிக்கிறது.
திருச்சிராப்பள்ளியில் உள்ள kB எரிசக்தி நிறுவனம் ஆனது தீபாவளிக்கு முன்னதாக ஏழு மாவட்டங்களில் உள்ள 2,000க்கும் மேற்பட்ட அலகுகளில் இருந்து சுமார் 30 டன் அளவிலான பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை சேகரித்து சேமித்து வைத்துள்ளது.
FSSAI விதிமுறைகள் ஆனது, பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்யில் 20 முதல் 25 சதவீதம் வரையில் மீண்டும் பயன்படுத்த அனுமதிக்கின்றன, மேலும் இந்தியாவில் உள்ள 64 உயிரி எரிபொருள் ஆலைகளில் தமிழ்நாட்டில் மூன்று உயிரி எரிபொருள் ஆலைகள் உள்ளன.
இவ்வாறு சேகரிக்கப்பட்ட இந்த எண்ணெயானது திருவானைக்காவலில் சுத்திகரிக்கப் பட்டு, சேமிக்கப் பட்டு அங்கீகரிக்கப்பட்ட உயிரி எரிபொருள் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப் படுகிறது.