ஜனவரி 2026 இல் 33 நன்கொடையாளர்களுடன் தமிழ்நாடு அதன் அதிகபட்ச மாதாந்திர இறந்த உறுப்பு தானங்களைப் பதிவு செய்தது.
அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிக எண்ணிக்கையிலான நன்கொடையாளர்கள் (5) பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்பதோடு இது மாற்று அறுவை சிகிச்சை செய்யாத உறுப்பு மீட்பு மையமாக (NTORC) செயல்படுகிறது.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் 4 பேர், சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் சென்னை மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை ஆகியவற்றில் தலா 2 பேர் பேர் கொடையாளர்களாகப் பதிவு செய்யப் பட்டுள்ளனர்.
கோயம்புத்தூர், சேலம், திண்டுக்கல், திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை ஆகிய இடங்களில் உள்ள பிற மருத்துவ மனைகளில் தலா ஒரு கொடையாளர் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
2025 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் மூளைச்சாவு அடைந்த 266 உறுப்பு தானம் பெற்றவர்கள் பதிவு செய்யப்பட்டனர் என்பதோடுமேலும் 2026 ஆம் ஆண்டின் முதல் 43 நாட்களில் 42 தானங்கள் பதிவு செய்யப் பட்டன.
இறந்த கொடையாளர் உறுப்பு மாற்றுத் திட்டம் ஆனது தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தால் ஒருங்கிணைக்கப்படுகிறது என்பதோடு மேலும் 2023 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசு ஆணை (GO) 331, மூளைச்சாவு அடைந்த கொடையாளர்களை அரசு மரியாதையுடன் கௌரவிக்கிறது.