TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் கழுகு வளங்காப்பு மண்டலங்கள்

January 17 , 2026 5 days 67 0
  • கழுகு வளங்காப்பு மண்டலங்களை (VSZs) அமைப்பதற்கான செயல்முறை தொடங்கப் பட்டுள்ளதாக தமிழ்நாடு வனத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.
  • நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் உள்ள மோயார் நதிப் பள்ளத்தாக்கைச் சுற்றி முதல் VSZ உருவாக்கப்படும்.
  • இது தமிழ்நாட்டில் கழுகு வளங்காப்புக்கான தொலைநோக்குத் திட்ட ஆவணத்தின் (VDVC) கீழ் 2025–2030 ஆம் கால கட்டத்தில் உருவாக்கப்படுகிறது.
  • முதன்மைத் தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வனவிலங்கு காப்பாளர் (PCCF-cum-CWC) ஒரு கள அளவிலான கண்காணிப்புக் குழுவை அமைத்துள்ளார்.
  • கழுகுகளைக் கொல்லும் டைக்ளோஃபெனாக் போன்ற தடை செய்யப்பட்ட கால்நடைப் பயன்பாட்டு ஸ்டெராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளின் (NSAID) பயன்பாட்டை நிறுத்துவதே VSZ மண்டலங்களின் நோக்கமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்