TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் சம்பா/தாளடி சாகுபடிப் பருவம் - 2024

May 7 , 2024 13 days 103 0
  • நடப்பு நீர் அளவீட்டு ஆண்டில் தமிழக மாநிலத்திற்கு சரியான நீர் வழங்கீடு இல்லை என்றாலும், டெல்டா பகுதியானது சம்பா/தாளடி சாகுபடி பருவத்தில் இயல்பை விட மூன்று லட்சம் ஏக்கர் பரப்பளவிலான சாகுபடியினைக் கடந்துள்ளது.
  • இருப்பினும், இந்த அதிகப்படியான சாகுபடியானது இலக்கை விட சுமார் 1.25 லட்சம் ஏக்கர் குறைந்துள்ளது.
  • ஏப்ரல் மாத இறுதியில் காவிரி நீர் வழங்கீடு ஆனது ஒட்டு மொத்தமாக 78.8 ஆயிரம் மில்லியன் கன அடியாக இருந்தது.
  • 8.9 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பிற்கு பதிலாக (ஐந்து ஆண்டு காலச் சராசரியின் அடிப்படையில்) டெல்டா பகுதி சுமார் 11.93 லட்சம் ஏக்கர் சாகுபடியினை எட்டியுள்ளது.
  • தற்போது சாகுபடி செய்யப்பட்ட பரப்பளவு சுமார் 11.67 லட்சம் ஏக்கர் ஆகும்.
  • சம்பா பருவத்தில் மட்டும் நேரடி விதைப்பு சார்ந்த சாகுபடி மேற்கொள்ளப்பட்ட நிலப் பரப்பு சுமார் 45.7% அல்லது 3.32 லட்சம் ஏக்கராக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்