TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் செயற்கை மழை பரிசோதனைகள்

November 8 , 2025 2 days 23 0
  • இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) மற்றும் மாநில அரசு இடையேயான கலந்துரையாடல்களின் கீழ் 1970 ஆம் ஆண்டில் தமிழ்நாடு செயற்கை மழை உருவாக்கம் (மேக விதைப்பு) குறித்து ஆராயத் தொடங்கியது.
  • முதல் சோதனைகள் ஆனது, 1973 ஆம் ஆண்டில் திருவள்ளூரில் இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (IITM) மூலம் நடத்தப்பட்டன, ஆனால் எந்த உறுதியான முடிவுகளும் எட்டப்படவில்லை.
  • 1975 ஆம் ஆண்டில், ஒரு கனடா நாட்டு நிறுவனம் ஆனது சென்னை மற்றும் நீலகிரிகளில் 12 லட்சம் செலவில் மேக விதைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பதோடு இதில் மழைப்பொழிவில் சுமார் 20% அதிகரிப்பைப் பதிவு செய்தது.
  • 1983 ஆம் ஆண்டில், தாமஸ் ஹென்டர்சன் தலைமையிலான ஓர் அமெரிக்கக் குழுவால் 26 லட்சம் ரூபாய் செலவில் மற்றொரு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்ற நிலையில் அதைத் தொடர்ந்து 1984 ஆம் ஆண்டில் மேலும் பல சோதனைகள் மேற்கொள்ளப் பட்டன.
  • மேக விதைப்புக்காக மாநில அரசு 1983 ஆம் ஆண்டில் ஒரு விமானத்தை வாங்கியது.
  • 1993 ஆம் ஆண்டில், புதிய சோதனைகள் நடத்தப்பட்டன ஆனால் மழைப்பொழிவு அதிகரிப்பு ஆனது இயல்பை விட 20 சதவீதத்திற்கும் மேலாக பதிவாகவில்லை என்று அறிவியலாளர்கள் முடிவு செய்தனர்.
  • 2003 ஆம் ஆண்டில் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பல பிந்தையத் திட்டங்கள் பொருத்தமற்ற வானிலையின் காரணமாக செயல்படுத்தப்பட வில்லை.
  • கிருஷ்ணா நீர், வீராணம் ஏரி மற்றும் உப்பு நீக்கும் ஆலைகள் சேர்க்கப்பட்டதன் மூலம், தமிழ்நாடு செயற்கை மழையைச் சார்ந்திருப்பது என்பது சமீபத்திய ஆண்டுகளில் தேவையற்றதாகி விட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்