ஜப்பானிய நாட்டுப்புறக் கதைகளில் தீங்கின் ஒரு அறிகுறியாக 'டூம்ஸ்டே மீன்' என்று குறிப்பிடப்படும் ஓர் அரிய வகை துடுப்பு மீன் ஆனது (ஓர்ஃபிஷ்) சமீபத்தில் தமிழகக் கடற்கரையில் பிடிபட்டது.
தமிழ்நாட்டில் பிடிக்கப்பட்ட இந்த உயிரினம் ஆனது ஒரு பெரிய ஓர்ஃபிஷ் (ரெகலேகஸ் க்ளெஸ்னே) ஆகும்.
இது சுமார் 36 அடி (11 மீட்டர்) வரை நீளம் வரை வளரக் கூடிய உலகின் மிக நீளமான எலும்புகளையுடைய மீன் ஆகும்.
அவை மிகப் பொதுவாக கடலின் மேற்பரப்பிற்கு அடியில் 660 முதல் 3,300 அடி ஆழம் வரையிலான இடை (மீசோபெலஜிக்) மண்டலத்தில் வாழ்கின்றன.
ஜப்பானிய நாட்டுப்புறக் கதைகளின்படி, இந்த ஓர்ஃபிஷ் மீன்கள் 'ரியுகு நோ சுகாய்', அதாவது 'கடல் கடவுளின் தூதர்' என்று அழைக்கப் படுகின்றன.