January 12 , 2026
2 days
34
- தமிழ்நாடு அரசு 2021-2025 காலகட்டத்தில் 100 வனப்பகுதிகளைக் காப்புக்காடுகளாக அறிவித்துள்ளது.
- இதன் மூலம் இந்த மாநிலத்தில் சுமார் 13,495 ஹெக்டேர் நிலப்பரப்பு சட்டப்பூர்வ வனப் பாதுகாப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
- இந்த அறிவிப்புகள் 1882 ஆம் ஆண்டு தமிழ்நாடு வனச் சட்டத்தின் பிரிவு 16-இன் கீழ் வெளியிடப்பட்டன.
- புதிய காப்புக்காடுகள் திண்டுக்கல், நீலகிரி மற்றும் தேனி உட்பட 10 மாவட்டங்களில் அமைந்துள்ளன.
- திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகபட்சமாக 37 புதிய காப்புக்காடு தொகுதிகள் உள்ளன.
- கள்ளக்குறிச்சி மாவட்டமானது 4,118 ஹெக்டேர் பரப்பளவில் அதிகப்படியான புதிதாக இணைக்கப்பட்ட பகுதியைக் கொண்டுள்ளது.

Post Views:
34