TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் முதல் மாநில அளவிலான இரைபிடிப் பறவை மதிப்பீடு

January 24 , 2026 10 days 70 0
  • தமிழ்நாடு அதன் முதல் மாநில அளவிலான இரைபிடிப் பறவை மதிப்பீட்டை ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 01, 2026 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிட்டுள்ளது.
  • மேம்பட்ட வனவிலங்குப் பாதுகாப்பு நிறுவனம் (AIWC) தமிழ்நாடு இரைபிடிப் பறவை ஆராய்ச்சி அறக்கட்டளையின் முன்னெடுப்பின் கீழ் இந்த மதிப்பீடு நடத்தப்பட உள்ளது.
  • இந்தக் கணக்கெடுப்பு 50க்கும் மேற்பட்ட வனப் பிரிவுகளில் பகல் நேரங்களில் செயல் படும் மற்றும் இரவு வாழ் இரைபிடிப் பறவைகளை உள்ளடக்கியது.
  • தமிழ்நாடு அக்ஸிபிட்ரிஃபார்ம்ஸ், ஃபால்கோனிஃபார்ம்ஸ் மற்றும் ஸ்ட்ரிஜிஃபார்ம்ஸ் வரிசைகளைச் சேர்ந்த 65க்கும் மேற்பட்ட இரைபிடிப் பறவை இனங்களை கொண்டு உள்ளது.
  • இந்த மதிப்பீடு இரைபிடிப் பறவைகளின் பரவலைப் படிப்பது, அவற்றிற்கான அச்சுறுத்தல்களைக் கண்டறிவது மற்றும் எதிர்கால வளங்காப்புத் திட்டமிடலை ஆதரிப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்