வேளாண்மை என்பது தமிழ்நாட்டின் பொருளாதாரத்தின் ஒரு பலவீனமான பிரிவாகும் என்பதோடுமேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில், 2023–24 மற்றும் 2024–25 ஆகிய ஆண்டுகளில் அதில் எதிர்மறையான வளர்ச்சி பதிவானது.
இது இந்திய மாநிலங்கள் குறித்த இந்திய ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரக் கையேட்டை அடிப்படையாகக் கொண்டது.
வேளாண் செயல்திறன் பலவீனமாக இருந்த போதிலும், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலைத் துறைகளின் வலுவான செயல்திறன் காரணமாக இம்மாநிலத்தின் பொருளாதாரம் நன்றாக வளர்ந்துள்ளது.
மொத்த உணவு தானிய உற்பத்தி (அரிசி, பருப்பு வகைகள் மற்றும் பருமணிகள்) 107 முதல் 120 லட்சம் டன்கள் வரை இருந்தது.
கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு, 2021–22 ஆம் ஆண்டில் அதிகபட்ச உற்பத்தி 119.98 லட்சம் டன்களாகவும், குறைந்தபட்ச உற்பத்தி 2023–24 ஆம் ஆண்டில் 107 லட்சம் டன்களாகவும் இருந்தது.
இந்த மாநிலத்தில் அரிசி முக்கிய உணவு தானியமாக உள்ளது, அதைத் தொடர்ந்து பருமணிகள், குறிப்பாக சிறு தானியங்கள், பருப்பு வகைகள் இதில் ஒரு சிறிய பங்கை மட்டுமே வழங்குகின்றன.
அரிசி மற்றும் பருமணிகளின் உற்பத்தி என்பது பல ஆண்டுகளாக பெரும்பாலும் நிலையானதாகவே உள்ளது.
2014–15 ஆம் ஆண்டில் 7.5 லட்சம் டன்னாக இருந்த பருப்பு உற்பத்தி, தற்போது சுமார் 3.6 லட்சம் டன்னாகக் குறைவாக உள்ளது.
பருத்தி, கரும்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் போன்ற உணவு அல்லாத பயிர்களின் உற்பத்தி குறைந்து வரும் போக்கைக் காட்டுகிறது.
எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி ஆனது கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 11.5 லட்சம் டன்னாக இருந்தது அதன் பின்னர் அது அந்த அளவைத் தாண்டவில்லை.
2014–15 ஆம் ஆண்டில் 6.86 லட்சம் பேல்களாக இருந்த பருத்தி உற்பத்தி கடந்த ஆண்டு 2.1 லட்சம் பேல்களாகக் குறைந்துள்ளது.
கரும்பு உற்பத்தி 2006–07 ஆம் ஆண்டில் 411 லட்சம் டன்னாக இருந்த நிலையில், தற்போது சுமார் 133.5 லட்சம் டன்னாக கடுமையாகக் குறைந்துள்ளது.
பருவமழை சூழல்கள், சந்தை விலை ஏற்ற இறக்கங்கள், அரிசி தவிர பிற பயிர்களுக்கான கொள்முதல் இல்லாமை மற்றும் புதிய பயிர் வகைகள் கிடைக்காதது ஆகியவை இதற்கு முக்கியக் காரணங்களாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
வேளாண் துறையின் செயல்திறனை மேம்படுத்த, குறிப்பாக மழை பெய்யும் பகுதிகளில், தோட்டக்கலைப் பயிர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டி நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.