பாராளுமன்றத்தில் இருந்து தனிநபர் தரவுப் பாதுகாப்பு மசோதாவினை அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளது.
2018 ஆம் ஆண்டில், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியான B.N.ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் இருந்த குழுவானது ஒரு வரைவைத் தயார் செய்ததில் இருந்து இந்த மசோதா நிலுவையில் உள்ளது.
மத்திய அரசானது 2019 ஆம் ஆண்டில் மக்களவையில் இந்த மசோதாவின் வரைவினை அறிமுகப்படுத்தியது.
இந்த மசோதாவானது 2021 ஆம் ஆண்டில் பாராளுமன்றக் கூட்டுக் குழுவின் மறுஆய்வு உட்பட பல மறு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டது.