TNPSC Thervupettagam

தரிசு நிலங்களை மீட்டெடுத்தல்: இலக்கு திருத்தியமைக்கப்பட்டது

September 10 , 2019 2112 days 591 0
  • 2030 ஆம் ஆண்டிற்குள் 26 மில்லியன் ஹெக்டேர் தரிசு நிலங்களைப் புனரமைப்பதை இந்தியா இலக்காகக் கொள்ளும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
  • முன்னதாக இந்த இலக்கு 21 மில்லியனாக இருந்தது. இப்போது அது திருத்தப்பட்டுள்ளது.
  • புது தில்லியில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் பாலைவனமாக்கலுக்கு எதிரான ஒப்பந்தத்தின் (United Nations Convention to Combat Desertification - UNCCD) உறுப்பு நாடுகளின் 14வது (COP 14) அமர்வின் போது இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.

UNCCD COP 14 இல் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகள்
  • சில ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப் படி, இந்தியாவில் மூன்று விலங்கு இனங்கள் பாலைவனமாக்கல் காரணமாக அழிந்து போகும் அபாயத்தில் உள்ளன.
  • அவை இந்தியச் சிறுத்தை, இளஞ் சிவப்பு தலை கொண்ட வாத்து மற்றும் கான மயில் ஆகும்.
  • பூச்சிக் கொல்லிகள், விவசாய நிலமாக மாற்றுவது, தொழில்கள் மற்றும் ரசாயனங்கள் ஆகியவை காரணமாக பாலைவனமாக்கல் ஏற்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்