TNPSC Thervupettagam

தவறான தகவல் வழங்கீட்டினை எதிர்ப்பதற்கான கூட்டணி

April 28 , 2023 841 days 348 0
  • தவறான தகவல் வழங்கீட்டினை எதிர்ப்பதற்கான கூட்டணி என்பது 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அமைக்கப்பட்ட ஊடக நிறுவனங்களின் ஒரு கூட்டணியாகும்.
  • இது தவறான தகவல் வழங்கீடுகளை எதிர்த்துப் போராடுவதையும் உண்மைத் தகவல் குறித்தச் சரிபார்ப்புச் செயல்முறைக்கு உதவும் கருவிகளை உருவாக்கச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சமீபத்தில், 2021 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு இணங்கிட வேண்டி  இயங் கலையில் வெளியாகும் போலிச் செய்திகளைக் கண்டறிந்துக் கட்டுப்படுத்தச் செய்வதற்கான ஒரு சுயக் கட்டுப்பாட்டு அமைப்பாகச் செயல்படுவதற்கு ஒரு அனுமதி கோரி அரசாங்கத்தினை இது அணுகியுள்ளது.
  • இது தற்போது பூம் லைவ், ஃபேக்ட்லி, தி லாஜிக்கல் இந்தியன், விஸ்வாஸ் நியூஸ் மற்றும் தி குயின்ட் போன்ற செய்தி வெளியீட்டு ஊடகங்கள் போன்ற 14 எண்ணிமச் செய்தி வெளியீட்டு நிறுவனங்களின் கூட்டமைப்பாக உள்ளது.
  • தவறான தகவல் வழங்கீட்டினை எதிர்ப்பதற்கான கூட்டணியில், உறுப்பினராவதற்கு விண்ணப்பிக்க எந்தவொரு நிறுவனத்திற்கும் வாய்ப்பு உண்டு.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்