தானியங்கி சமிக்ஞை அமைப்புடன் கூடிய இந்தியாவின் மிக நீளமான இரயில் பாதை
January 9 , 2023 953 days 447 0
இந்திய இரயில்வேயானது ஒரு பணி முறையில் ‘தானியங்கி சமிக்ஞை அமைப்பினை’ உருவாக்கியுள்ளது.
தானியங்கி சமிக்ஞை அமைப்பு என்பது ஒரு செலவு குறைந்தத் தீர்வாகும்.
இந்திய இரயில்வே நிர்வாகத்தின் காசியாபாத் - பண்டிட் தீன தயாள் உபாத்யாய் இரயில்வே நிர்வாகப் பிரிவானது, நாட்டின் மிக நீளமான முழு அளவிலான தானியங்கி சமிக்ஞை பிரிவாக மாறியுள்ளது.
762 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த இரயில் பாதையானது முழுவதுமாக தானியங்கி மயமாக்கப் பட்டுள்ளது.
தானியங்கி சமிக்ஞை அமைப்பானது, தானியங்கி நிறுத்த சமிக்ஞைகள் மூலம் இரயில்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.