TNPSC Thervupettagam

தாமிரபரணி நதி மாசுபாடு வழக்கு

January 6 , 2026 2 days 108 0
  • தாமிரபரணி நதியில் நிலவும் மாசுபாடு குறித்து ஆய்வு செய்வதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு ஆனது, நீர் வளங்காவலர் இராஜேந்திர சிங்கை ஆணையராக நியமித்துள்ளது.
  • இந்த உத்தரவு ஆனது, 2026 ஆம் ஆண்டு ஜனவரி 03 ஆம் தேதியன்று பிறப்பிக்கப் பட்டது.
  • இராஜேந்திர சிங் ஒரு ரமோன் மகசேசே விருது பெற்ற நபர் ஆவார்.
  • "இந்தியாவின் நீர் மனிதர்" என்றும் அழைக்கப்படும் ராஜேந்திர சிங், புகழ் பெற்ற இந்தியச் சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் நீர் பாதுகாப்பாளர் ஆவார்.
  • நதியின் நிலை குறித்து விரிவான ஆய்வு நடத்துவதற்கு அவருக்கு உத்தரவிடப் பட்டு உள்ளது.
  • அவர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தச் செய்வதற்கான தீர்வு நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்