TNPSC Thervupettagam

தாழ் மட்ட வான்வழி இயக்கப் பொருளாதார மையம்

October 11 , 2025 13 hrs 0 min 13 0
  • ஆளில்லா விமானங்கள் மற்றும் மேம்பட்ட வான்வழி வாகனங்களின் இயக்கத்தினை மையமாகக் கொண்ட தாழ் மட்ட நிலையிலான வான்வழி இயக்கத்திற்கான (LAE) இந்தியாவின் மையமாக மாறுவதற்கான ஓர் உள்கட்டமைப்பு செயல் திட்டத்தினை தமிழ்நாடு அரசு தயாரித்து வருகிறது.
  • LAE ஆனது 3,000 மீட்டர் வரையிலான உயரம் வரை மேற்கொள்ளப்படும் வான்வழி நடவடிக்கைகளை உள்ளடக்கியது.
  • இதில் அதிகரித்து வரும் ஆளில்லா விமானத் தொழில்நுட்பங்களால் இயக்கப்படும் மனிதர்கள் கொண்ட மற்றும் ஆளில்லா அமைப்புகள் அடங்கும்.
  • மாநில அரசானது இந்தியாவின் முதல் ஆளில்லா விமான சோதனை மையத்தை வல்லம் வடகலில் உள்ள SIPCOT வளாகத்தில் அமைத்துள்ளது.
  • இது செட்டிநாடு விமான நிலையத்தில் BVLOS (காட்சிப் புலனாகும் நிலைக்கு அப்பால்) வசதிகளையும் உருவாக்கி வருகிறது.
  • தமிழ்நாடு அரசு, வான்வழி வாடகை வாகன நிலையங்கள் (வெர்டிபோர்ட்கள்), ஆளில்லா விமான வழித்தடங்கள், பயிற்சி வழித்தடங்கள் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்புகளை விவரிக்கின்ற தனது மாபெரும் திட்டத்தினை 2025 ஆம் ஆண்டு LAE மன்றத்தில் வெளியிட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்