கேரளாவின் ஜவஹர்லால் நேரு வெப்பமண்டல தாவரவியல் பூங்கா மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (JNTBGRI) அறிவியலாளர்கள், சிவப்பு முறிவொட்டி செடியைப் பயன்படுத்தி ஒரு காயச் சுற்றுத் துணியை உருவாக்கினர்.
இந்தத் தாவரம், உள்ளூரில் முறிகூட்டிப் பச்சை (ஸ்ட்ரோபிலாந்தஸ் ஆல்டர்னேட்டா) என்று அழைக்கப்படுகிறது.
இது அகந்தேசி குடும்பத்தைச் சேர்ந்தது மற்றும் இந்தியா உள்ளிட்ட வெப்பமண்டலப் பகுதிகளில் வளர்கிறது.
ஆராய்ச்சியாளர்கள் சிவப்பு முறிவொட்டி செடியிலிருந்து உயிரியியக்கச் சேர்மமமான ஆக்டியோசைடை பிரித்து, அதை முதல் முறையாக தாவரத்தின் பாரம்பரிய காயம் குணப்படுத்தும் பயன்பாட்டுடன் ஒருங்கிணைத்தனர்.
காயச் சுற்றுத் துணி மின்னியல் ரீதியாக நெய்யப்பட்ட (எலக்ட்ரோ-ஸ்பன்) நுண் இழைகளைப் பயன்படுத்துகிறது மற்றும் ஆக்டியோசைடு (0.2%), நியோமைசின் சல்பேட் மற்றும் FDA அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட மக்கும் பலபடி சேர்மங்களைக் கொண்டுள்ளது.