தாவரப் பூச்சியினங்கள் மீது பருவநிலை மாற்றத்தின் தாக்கம்
June 11 , 2021 1529 days 595 0
உணவு மற்றும் வேளாண் அமைப்பு மற்றும் தாவரப் பாதுகாப்பு உடன்படிக்கை ஆகியவை இணைந்து தாவரப் பூச்சியினங்கள் மீது பருவநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்த அறிவியல்பூர்வ மறுசீராய்வு எனும் அறிக்கையை வெளியிட்டுள்ளன.
இந்த அறிக்கையானது இத்தாலியிலுள்ள துரின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மரியா லொடோவிகா மற்றும் 10 இணை ஆசிரியர்கள் ஆகியோரால் இணைந்து தயாரிக்கப் பட்டதாகும்.
பருவநிலை மாற்றமானது தாவரப் பூச்சியினங்களில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதையும் அதனால் தாவர ஆரோக்கியத்தில் ஏற்படும் விளைவுகள் பற்றியும்குறிப்பிட்டுக் காட்டுவதிலேயே இந்த அறிக்கை அதிக ஈடுபாடு செலுத்துகிறது.
ஒவ்வோர் ஆண்டும் உலகின் 40 சதவீத வேளாண் பயிர்கள் பூச்சிகளால் அழிக்கப் படுவதாக இந்த அறிக்கை கூறுகிறது.