தனியார் துறை ஊழியர்களுக்கான அதிகபட்சத் தினசரி வேலை நேரத்தை ஒன்பது மணி நேரத்திலிருந்து பத்து மணி நேரமாக அதிகரிக்க மகாராஷ்டிரா அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதற்காகத் தொழிற்சாலைகள் சட்டம், 1948 மற்றும் மகாராஷ்டிரா கடைகள் மற்றும் நிறுவனங்கள் (வேலைவாய்ப்பு மற்றும் சேவை நிபந்தனைகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டம், 2017 ஆகியவற்றில் திருத்தங்கள் செய்யப்படும்.
இதனால் கூடுதல் வேலை நேர வரம்புகள் அதிகரிக்கும் என்பதோடு மேலும் தொழிலாளர்கள் கட்டாய எழுத்துப்பூர்வ ஒப்புதலுடன் அதற்கான சரியான இழப்பீட்டைப் பெறுவார்கள்.
இந்த மாற்றங்கள் முதலீட்டை ஈர்ப்பது, வேலைவாய்ப்பை உருவாக்குவது மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.