March 7 , 2023
1137 days
571
- அருணாச்சலப் பிரதேசத்தில் மிகப்பெரிய நீர்மின் நிலையத்தினை அமைப்பதற்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்தப் பல்நோக்கு பயன்பாட்டுத் திட்டம் ஆனது திபாங் ஆற்றில் சீனாவின் எல்லைக்கு அருகில் அமைக்கப்படுகிறது.
- திபாங் நீர்மின் நிலையத்தினைக் கட்டமைப்பதற்கு ஒன்பது ஆண்டுகள் ஆகும் என மதிப்பிடப் பட்டுள்ளது.
- இந்த நீர்மின் நிலையத்தினைத் தேசிய நீர் மின்னாற்றல் கழக (NHPC) லிமிடெட் என்ற நிறுவனத்தினால் உருவாக்கப்பட உள்ளது.
- திஹாங், திபாங் மற்றும் லோஹித் ஆகியவை பிரம்மபுத்திரா நதியின் முக்கிய துணை நதிகள் ஆகும்.
- திப்ரு-சைகோவா என்ற சரணாலயத்திற்கு அருகில் திபாங் நதி லோஹித் நதியுடன் இணைகிறது.
- திபாங் நதியின் துணை நதிகள் எம்ரா, இதுன், டிரி, ரங்கோன், மாதுன் மற்றும் சிசார் ஆகியனவாகும்.

Post Views:
571