சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் இந்தப் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இது பாதுகாப்பு, மேம்பாடு, தொழில்நுட்பம் மற்றும் நிறுவன சீர்திருத்தங்கள் குறித்து SCO உறுப்பினர்களின் பொதுவான நிலைப்பாடுகளை நிர்ணயிக்கிறது.
செயற்கை நுண்ணறிவை (AI) உருவாக்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் அனைத்து நாடுகளின் சம உரிமைகளையும் இந்தப் பிரகடனம் ஆதரிக்கிறது.
AI அமைப்புகளில் பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை, நியாயத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்ய SCO உறுப்பினர் நாடுகள் ஒப்புக்கொண்டன.
இது SCO AI ஒத்துழைப்பு செயல் திட்டம் மற்றும் துஷான்பேயில் ஒரு பிராந்திய AI மையத்தினை அமைப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை (UNGA) முன்மொழிவை ஆதரிக்கிறது.