TNPSC Thervupettagam

திருத்தப்பட்ட திட்ட ஆவணம் - பசுமை இந்தியா திட்டம்

June 20 , 2025 13 days 61 0
  • சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் ஆனது 2021-2030 ஆம் காலக் கட்டத்திற்கான திருத்தப்பட்ட ஆவணத்தை வெளியிட்டுள்ளது.
  • திருத்தப்பட்ட திட்ட ஆவணத்தில், அனைத்து மறுசீரமைப்பு நடவடிக்கைகளிலிருந்தும் இந்தியா 3.39 பில்லியன் டன் கார்பன் (உறிஞ்சுப் பகுதி) பிடிப்பினை அடைய முடியும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
  • இதற்கு மதிப்பிடப்பட்ட சுமார் 24.7 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் காடு மற்றும் மரங்களின் பரப்பளவை அதிகரிக்க வேண்டும்.
  • கூடுதல் காடு மற்றும் மரங்களின் பரவல் மூலம் 2.5 முதல் 3 பில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடுக்கு சமமான கூடுதல் கார்பன் பிடிப்பினை உருவாக்குவதே தேசியப் பசுமை இந்தியா திட்டத்தின் நோக்கமாகும்.
  • இந்தத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் 2015-16 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன.
  • திருத்தப்பட்ட ஆவணத்தின்படி, 2020-21 ஆம் ஆண்டு வரையில் சுமார் 11.22 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு மரம் வளர்ப்பு பகுதியின் கீழ் சேர்க்கப் பட்டது.
  • சதுப்புநிலங்கள் மற்றும் இந்திய இமயமலைப் பகுதியுடன் சேர்ந்து, ஆரவல்லி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்கள் போன்ற எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலப் பரப்புகளை மீட்டெடுப்பதில் அமைச்சகம் கவனம் செலுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்