இந்திய ரிசர்வ் வங்கியானது, அதன் பொருளாதார மூலதனக் கட்டமைப்பு (ECF) மற்றும் இடர் வழங்கல் விதிமுறைகளை திருத்துவதன் மூலம் அதன் நிதி சார் மீள்தன்மையை வலுப்படுத்த ஒரு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இந்தத் திருத்தமானது பிமல் ஜலான் குழு பரிந்துரைத்தபடி, ஐந்து ஆண்டு காலக் கட்ட மதிப்பாய்வைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.
2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட முதலாவது ECF ஆனது, சுமார் ஐந்து ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியானது அதன் பல்வேறு அபாயங்களை ஈடு கட்டுவதற்கு வேண்டி எவ்வளவு மூலதனத்தைப் பேண வேண்டும் மற்றும் அதன் உபரி வருமானத்தில் எந்த அளவு இந்திய அரசாங்கத்திற்கு மாற்றப் படலாம் என்பதை இந்த ECF நிர்வகிக்கிறது.
இந்தப் புதிய கட்டமைப்பு ஆனது சுமார் 4.5-7.5 சதவீத எதிர்பாராத இடர் இடையக (CRB) வரம்பை அனுமதிக்கிறது என்பதோடு இது அதன் முந்தைய 5.5-6.5 சதவீத வரம்பில் இருந்து விரிவுபடுத்தப்பட்டதாகும்.
2019 ஆம் நிதியாண்டு முதல் 2022 ஆம் நிதியாண்டு வரையில், RBI ஆனது 5.50 சதவீத CRB என்ற வரம்பை பேணியது.
2023 ஆம் நிதியாண்டில், இது சுமார் 6 சதவீதமாகவும், 2024 ஆம் நிதியாண்டில் சுமார் 6.5 சதவீதமாகவும் அதிகரித்தது.
இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியமானது, 2024-25 ஆம் நிதியாண்டிற்கு இந்திய அரசாங்கத்திற்கு என தோராயமாக 2.69 டிரில்லியன் டாலர் உபரி பரிமாற்றத்திற்கு ஒப்புதல் அளித்தது.