திருநங்கையர் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்தச் சட்ட மசோதா, 2026
March 26 , 2026 163 days 339 0
திருநங்கையர் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்தச் சட்ட மசோதா, 2026 மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா அடையாள அங்கீகார நடைமுறையை மாற்றுகிறது என்பதால் இதன்படி மருத்துவக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரின் சான்றிதழ் அவசியமாகும்.
அடையாளச் சான்றிதழைப் பெற்ற பிறகு, திருநங்கையர் தங்களது அதிகாரப்பூர்வ ஆவணங்களில் பெயரை மாற்றிக் கொள்ள இது அனுமதிக்கிறது.
இது 2019-ஆம் ஆண்டின் திருநங்கையர் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்தில் திருத்தம் செய்கிறது.
இந்திய உச்ச நீதிமன்றம் (NALSA தீர்ப்பு, 2014), அரசியலமைப்பின் 21வது சரத்தின் கீழ் (வாழும் உரிமை) சுய-அடையாள உரிமையை அங்கீகரித்துள்ளது.