தேசிய சுகாதார ஆணையம் (NHA) மற்றும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை ஆகியவை சமீபத்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
ஆயுஷ்மான் பாரத்-பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா என்ற திட்டத்தின் கீழ் திருநர்களுக்கு வேண்டிய முழுமையான சுகாதாரச் சேவைகளை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள தேசிய திருநர் தளம் மூலம் வழங்கப்படும் திருநர்கள் என்றச் சான்றிதழை வைத்திருக்கும் நபர் அனைத்துச் சுகாதார வசதிகளின் பலனையும் பெறுவார்.
ஆயுஷ்மான் பாரத்-பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் திருநர்களுக்குச் சிறப்புச் சலுகைகளுடன் கூடிய இலவச சிகிச்சை அளிக்கப்படும்.
ஆயுஷ்மான் பாரத்-பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ், ஒவ்வொரு தகுதியுள்ள நபரும் ஒவ்வோர் ஆண்டும் ரூ. 5 லட்சம் வரையிலான சுகாதாரக் காப்பீட்டைப் பெறுகிறார்கள்.