TNPSC Thervupettagam

திருமணமின்றி இணைந்து வாழும் உறவு முறிவு – உச்சநீதிமன்றம்

May 3 , 2026 14 hrs 0 min 18 0
  • பரஸ்பர சம்மதத்துடன் கூடிய லிவ்-இன் (திருமணமின்றி ஒன்றாக வாழும்) உறவை முடித்துக் கொள்வது குற்றவியல் சட்டப்படி குற்றம் அல்ல என இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
  • பிரிந்த பிறகு, விருப்பத்தின் பேரில் அமைந்த உறவைப் பாலியல் வன்கொடுமை அல்லது சுரண்டலாகக் கருத முடியாது என்று நீதிமன்றம் கூறியது.
  • சட்டத்தின் கீழ் லிவ்-இன் உறவுகளுக்கு திருமணத்திற்கு இணையான சட்டப்பூர்வ அந்தஸ்து இல்லை என்பதை அது தெளிவுபடுத்தியது.
  • குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 125-இன் கீழ் குழந்தைக்கான பராமரிப்புச் செலவை கோர பெண்ணுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
  • 2005-ஆம் ஆண்டின் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் "திருமணத்தின் தன்மையிலான" உறவுகளை உள்ளடக்கியது என்பதை நீதிமன்றம் குறிப்பிட்டது.
  • இது போன்ற வழக்குகளில் குற்றவியல் பொறுப்பைத் தீர்மானிப்பதில் 'சம்மதம்' என்பது முக்கியமானது என்று இத்தீர்ப்பு வலியுறுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்