சரஸ்வதி மகால் நூலகத் தமிழ் பண்டிதர் மணிமாறன் தலைமையிலான வரலாற்று ஆசிரியர்கள் குழுவானது, சோழர்காலத் தமிழ் படைப்பான திருவடுகூர் புராணத்தின் பொருள் கண்டுணர்ந்துள்ளது.
இது கடலூர் மாவட்டத்தில் உள்ள திருக்கண்டீஸ்வரமுடையார் கோவிலில் காணப் படும் கல்வெட்டுகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டுகளின் பொருள் கண்டுணர்தலில், வடுகூரில் உள்ள சைவக் கோயிலின் 'ஸ்தல புராணம்' அல்லது 'வடுகூர் புராணம்' என்பதினை 'வனதிபன்' என்ற ஒரு நபர் உருவாக்கியதாக தெரிய வந்தது.
திருஞானசம்பந்தர் பாடிய 'தேவாரம்' பாடல்களில் இது குறிப்பிடப் பட்டுள்ளது.
இருப்பினும், 'வடுகூர் புராணம்' தாங்கிய பனை ஓலைச் சுவடிகளோ அல்லது செப்புத் தகடுகளோ தற்போது வரை கிடைக்கவில்லை.