திருவண்ணாமலையில் சுமார் 37 கோடி ரூபாயில் கட்டப்பட உள்ள சிறிய டைடல் பூங்காவிற்கு முதலமைச்சர் காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
சிறிய டைடல் பூங்காக்கள் தமிழ்நாடு முழுவதும் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களில் உள்ள இந்தப் பூங்காக்கள் கடந்த ஆண்டு திறக்கப்பட்ட அதே நேரத்தில் காரைக்குடி, திருப்பூர் மற்றும் வேலூரில் புதிய பூங்காக்கள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன.