தமிழ்நாட்டின் திருவலஞ்சுழியில் உள்ள நுரைப் பிள்ளையார் சன்னதியில் உள்ள கல் பலகணி/சன்னல், பிற்காலச் சோழர் காலத்தின் அபாரமான கைவினைத்திறனை எடுத்துக் காட்டுகிறது.
இந்தப் பலகணி/சன்னலானது, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சடைமுடி நாதர் கோயில் வளாகத்திற்குள் அமைந்துள்ளது.
இந்தப் பலகணி நான்கு கல்தூண்கள், சிக்கலான பின்னல் வேலைப்பாடுகள், மலர் வடிவமைப்பு மற்றும் யாழிகளின் (புராணங்களில் வரும் சிங்கம் போன்ற உயிரினங்கள்) சிற்பங்களைக் கொண்டுள்ளது.
இதில் உள்ள இரண்டு மையத் தூண்கள் ஒற்றைக் கல்லால் செதுக்கப்பட்டுள்ளன. இது சோழ கைவினைஞர்களின் மேம்பட்ட கல் செதுக்கும் திறனைக் காட்டுகிறது.
இந்த சன்னதியில் சுமார் 50 கல்வெட்டுகள் உள்ளன என்ற நிலையில் அவற்றில் பழமையானது மூன்றாம் குலோத்துங்கன் காலத்தைச் சேர்ந்ததாகும்.