GalaxEye நிறுவனமானது, உலகின் முதல் OptoSAR செயற்கைக்கோளான திருஷ்டி திட்டத்தை அறிமுகப் படுத்தியது.
இது சுமார் 190 கிலோ எடையுள்ள, இந்தியாவின் தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய புவி கண்காணிப்பு செயற்கைக் கோளாகும்.
இந்தச் செயற்கைக்கோள், அனைத்து வானிலைகளிலும், இரவும் பகலும் படமெடுப்பதற்காக Electro Optical மற்றும் Synthetic Aperture Radar உணர்விகளையும் ஒருங்கிணைக்கிறது.
இது கலிபோர்னியாவிலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தால் ஃபால்கன் 9 (Falcon 9) ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
திருஷ்டி திட்டமானது, பாதுகாப்பு, வேளாண்மை, பேரிடர் மேலாண்மை மற்றும் உள்கட்டமைப்புத் திட்டமிடல் ஆகிய துறைகளில் பயன்பாடுகளை ஆதரிக்கிறது.