மழைக்காலத்தில் கொசுப் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்துவதற்காக என்று ஆந்திரப் பிரதேச மாநில அரசானது திறன் மிகுந்த கொசு கண்காணிப்பு அமைப்பு (SMoSS) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இந்த திட்டமானது விசாகப்பட்டினம், விஜயவாடா, காக்கிநாடா, இராஜமஹேந்திர வரம், நெல்லூர் மற்றும் கர்னூல் ஆகிய ஆறு நகரங்களில் 66 இடங்களில் செயல்பட உள்ளது.
இந்த அமைப்பானது கொசு வகைகள், எண்ணிக்கைகள் மற்றும் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் போன்ற வானிலைச் சூழல்களை நன்கு கண்காணிப்பதற்காக செயற்கை நுண்ணறிவு (AI), இணைய உலக அமைப்பின் (IoT) உணர்வுக் கருவிகள் மற்றும் சில ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்துகிறது.
ஆளில்லா விமானங்கள் ஆனது குறைந்த நேரத்தில் குறைந்த இரசாயனங்கள் மற்றும் குறைந்த செலவில் கொசுக்களைக் கொல்லும் இரசாயனங்களை மிகவும் வேகமாக தெளிக்கும்.
ஒரு நேரடி முகப்புப் பக்கமானது, விரைவான மற்றும் தெளிவான கண்காணிப்புக்காக ஒரு மைய அமைப்புக்கு நிகழ்நேர தரவைக் வழங்கும்.