மதிப்பு கூட்டப்பட்ட திலேப்பியா மீன் பொருட்களை ஏற்றுமதி செய்யத் தொடங்கிய இந்தியாவின் முதல் உள்நாட்டு மாநிலமாக சத்தீஸ்கர் உருவெடுத்துள்ளது.
இந்த மாநிலம் 382 டன் திலேப்பியா தயாரிப்புகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது.
பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனாவின் (PMMSY) கீழ் சத்தீஸ்கர் மீன்வளத் துறையில் சுமார் ₹900 கோடி முதலீடு செய்துள்ளது.
குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் தொட்டிகள் போன்ற உள்நாட்டு நீர் வளங்களைப் பயன்படுத்தி மாநிலத்தின் மீன் உற்பத்தி சுமார் 10 லட்சம் டன்களை எட்டியுள்ளது.
சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் திலேப்பியா தொகுப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
திலேப்பியா என்பது நன்னீர் மீனாகும், இது குளங்கள், தொட்டிகள், கூண்டுகள் மற்றும் பிற மீன்வளர்ப்பு அமைப்புகளின் மூலம் பரவலாக வளர்க்கப்படுகிறது.