TNPSC Thervupettagam

தீர்க்கவதி கிருஷக் புஞ்சி சாகர் யோஜனா

March 20 , 2026 11 hrs 0 min 9 0
  • கூட்டுறவுச் சங்கங்களுக்கான நீண்டகாலக் கடனை வலுப்படுத்துவதற்காக, கூட்டுறவு அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தால் (NCDC) இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டம் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளுக்கு நீண்டகால நிதி உதவியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இதன் மூலம் மூலதன உருவாக்கம் மற்றும் கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டை ஊக்குவிக்கிறது.
  • நிலையான நிறுவன கடன் ஓட்டத்தை உறுதி செய்வதற்கும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கும் சிறந்த நிதிச் செயல்பாட்டைக் கொண்ட கூட்டுறவுச் சங்கங்களை இது இலக்காகக் கொண்டுள்ளது.
  • தேசியக் கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் சரியான பாதுகாப்பு மற்றும் உரிய ஆய்வு நெறிமுறைகளுடன் மதிப்பீடு செய்தல், கண்காணித்தல் மற்றும் கடன் அனுமதித்தல் போன்றவற்றை மேற்கொள்கிறது.
  • மீட்பு வழிமுறைகளில், SARFAESI (நிதிச் சொத்துகளின் பிணையமாக்கல் மற்றும் மறு சீரமைப்பு மற்றும் பிணைய நலன்களைச் செயல்படுத்துதல்) சட்டம், 2002 இன் கீழ் உள்ள சட்ட விதிகள் மற்றும் கடன் மீட்புத் தீர்ப்பாய (DRT) நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்