TNPSC Thervupettagam

தீவனம் சார்ந்த நடவடிக்கைகளுக்கான உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள்

November 16 , 2022 902 days 385 0
  • மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகமானது, 2020 ஆம் ஆண்டில் தீவனம் சார்ந்த நடவடிக்கைகளுக்கான உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை (FPOs) நிறுவுவதற்கான முன்மொழிதலை முன் வைத்தது.
  • இது "10,000 புதிய உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்குதல் மற்றும் ஊக்குவித்தல்" என்ற மத்திய அரசின் ஒரு திட்டத்தின் கீழ் தீவனம் சார்ந்த நடவடிக்கைகளுக்கான உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை நிறுவச் செய்வதற்கு அனுமதிக்குமாறு மத்திய வேளாண் அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்தது.
  • இந்தியாவில் நிலவும் தீவனப் பற்றாக்குறை நிலைமையை நிவர்த்தி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தேசியப் பால்வள மேம்பாட்டு வாரியமானது இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தச் செய்வதற்கான முகமையாக நியமிக்கப்பட்டுள்ளது.
  • இது 2022-23 ஆம் ஆண்டில் இது போன்ற 100 தீவனம் சார்ந்த நடவடிக்கைகளுக்கான உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை நிறுவுவதை இலக்காக நிர்ணயித்துள்ளது.
  • தற்போது, ​​இந்தியாவில் நிலவும் தீவனப் பற்றாக்குறையானது பசுந்தீவனத்திற்கு 12 முதல் 15 சதவீதமாகவும், உலர் தீவனத்திற்கு 25-26 சதவீதமாகவும், அடர் தீவனத்திற்கு 36 சதவீதமாகவும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்