புது தில்லியில் நடத்தப்பட்ட தீவுகள் மேம்பாட்டு ஆணையத்தின் ஆறாவது கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் தலைமை தாங்கினார்.
இந்தச் சந்திப்பானது "புதிய உச்சத்தை எட்டுவதற்காக தீவுகளில் பசுமை மேம்பாடு" என்பதின் மீது கவனத்தைச் செலுத்தியது.
தீவுகளின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக தீவுகள் மேம்பாட்டு ஆணையமானது (Island Development Agency - IDA) அறிவியல் பூர்வமாக மதிப்பிடப்பட்ட நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை நிர்ணயித்துள்ளது.
அந்தமான் நிக்கோபர் தீவுக் கூட்டங்களில் உள்ள நான்கு தீவுகளிலும் லட்சத்தீவுக் கூட்டங்களில் உள்ள ஐந்து தீவுகளிலும் இந்த திட்டமானது செயல்படுத்தப்பட இருக்கின்றது.
இந்தத் திட்டத்தின் இரண்டாம் நிலையில் அந்தமான் நிக்கோபர் தீவுக் கூட்டங்களில் உள்ள மேலும் 12 தீவுகள் மற்றும் லட்சத்தீவு தீவுக் கூட்டங்களில் உள்ள மேலும் 5 தீவுகள் ஆகியவை சேர்க்கப்பட இருக்கின்றன.